Monday, December 29, 2014

 EPISODE-455 TAMIL


EPISODE-455 -TAMIL
அத்தியாயம்- 455 MONDAY -29/DEC /2014 

இன்றைய , அத்தியாயம் மிக சாதாரணமான பாகமாக  இருந்தாலும்,மிக முக்கியமான அம்சங்களை மிகவும் குறுகிய நேரத்தில் காட்டியதாகவும் இருந்தது!,

காட்சி-1

நேற்று விஷ்ணு ,ராஜிக்கு,மருத்துவமனையில் நடந்த விடயங்களை எல்லாம்
அப்படியே ஒன்றும் விடாமல் ஒப்படைத்துச் சொல்வதைக் கேட்டு .ராஜி ஆச்சரியம் அடைவதுடன் மீண்டும் ,இன்றைய பாகம் ஆரம்பமாகின்றது!
அவன் சொல்வதைக்கேட்டு அவள் உண்மையை அறிந்து கொள்கின்றாள்
கார்த்திக் குடித்து விட்டு வந்ததற்கும் தானே காரணம் என்றும் தன்னிடம் மருத்துவரிடம் போகவேண்டி இருந்ததைப் பற்றி ஒருவார்த்தையும் கூடச்  சொல்லவில்லை என்றும் சொல்கின்றான்! 
அனால் அதே வேலையில் கார்த்திக்  தன்னுடன் இல்லாமல் இருந்திருந்தால்
தான் வகையாக மாட்டிக் கொண்டு இருந்திருப்பேன் என்றும் சொல்கின்றான்!
அவனுக்கு கார்த்திக்கும் ,ராஜிக்கும் மருத்துவரிடம் போகவேண்டிய தவணை இருந்தது என்று தெரிந்து இருந்தால் ,தான் நிச்சயமாக அவனை அனுப்பி வைத்திருப்பேன் என்றும் சொல்கின்றான்!
அதைத் தொடர்ந்து வெளியில் பேசிக் கொண்டு இருந்தவர்களின் கவனத்தை
உள்ளுக்கு இருந்து வந்த கார்த்திக்கின்  குரல் திசைதிருப்புகின்றது!
விஷ்ணு அவன் குரலைக் கேட்டதும் "மருத்துவரிடம் உனக்கு  போகவேண்டி இருந்தது  என்று என்னிடம் ஏன் சொல்லவில்லை 'என்று கேட்டு வைக்கின்றான்.
ராஜியும் கார்த்திக்கிடம் மிகவும் தயவாக அதையே கேட்கின்றாள்!
அதற்க்கு அவன் பதில்  சொல்லாமல் ,அவளை நிராகரித்த படியே,ஆனால் அவளைப் பார்த்துக்  கொண்டு " எனக்குத் தோணவில்லை" என்கின்றான்.
கார்த்திக் உள்ளே இருந்து கொண்டே ,விஷ்ணுவை "இவளுக்கு  ஏன் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு இருக்கிறாய் "என்று கேட்கின்றான் .
அவன் வார்த்தைகளில் ,ஒரு குத்தல் தனம்  தெரிந்தது!
ராஜி முதல் நாள் அவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததற்கு,அவள்  இவனுக்கு கொடுத்த இம்சைக்குப்  பதிலடி கொடுப்பது போலிருந்தது .
அது மட்டுமலாமல் தொடர்ந்து தனக்குப் போகத்தோன்றவில்லை என்பதுடன்
அவரவருக்கு  அவரவர் பிரச்சனை முக்கியமாக இருப்பதுடன் நீ என்னைத்தானே பார்க்க வந்தாய் ஏன் அவளோடு பேசிக் கொண்டு  இருக்கின்றாய் என்றும் குத்தலாக கேட்டு ராஜிக்கு வெறுப்பு ஏற்றுகின்றான்!
ராஜி இதைக் கேட்டு வெதும்புவதுடன் அவனை ஆழமாகப் பார்த்துக்கொண்டு.அவன் உள்ளே அழைத்த விஷ்ணுவையும் உற்று நோக்குகின்றாள்!

காட்சி-2
மணிமேகலை ,விஷ்ணுவைத் தேடி அவனது அலுவலக அறைக்கு  வருகின்றாள்.தன்னை ஏன் அவன்
 முன்னர்மாதிரிக் கவனிக்காமல்,ஏறெடுத்துப் பார்க்காமல் இருக்கிறான் என்று கேட்கின்றாள்!
அவனோ அதற்கு தனது தற்போதைய நிலைமையை சொல்வதுடன் அவளையும் மிகவும்
மனதளவில் காயப் படுத்தி ஆத்திரமாகப்  பேசுகின்றான்!
மணிமேகலையைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது!அவள் விஷ்ணுவிடம் கெஞ்சிப் பார்த்து விட்டு
மிகவும் நொந்த மனதுடன் கண்கலங்க வெளியேறுகின்றாள்!

காட்சி-3
விஷ்ணு மனோகரின்   வீட்டுக்கு வருகின்றான்! அங்கே அவனை மனோகரனின்  சுட்டி மகள் வரவேற்று இருக்கச் சொல்லுகின்றாள்!
அந்தச் சிறிய பெண் தன தாயையும் கூப்பிட்டு இவன் வருகையை அறிவிக்கின்றாள்!
படத்தில் மாட்டி உள்ள மனோகரின் படத்தைப் பார்த்து விஷ்ணு கண்கலங்கவே அந்த சுட்டிப் பெண்
அவனைக்  கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டு மடக்குகின்றாள்.
பின்னர் தாய்க்கும் அவன் கலங்குவதைப் பற்றிக் கூறுகின்றாள். அவளின் நடிப்பு பிரமாதமாக இருந்தது!

காட்சி-4

இந்தக் கடைசிக் காட்சியில் விஷ்ணு தான் மனோகரின் பழைய நண்பன் என்றும் அவனுக்கு தான் பணம் கொடுக்க வேண்டி இருப்பதுடன் இவளையும் பார்த்து விட்டு அதையும் கொடுக்க வந்ததாகக் கூறுகின்றான்! மனைவி முதலில் அதை நம்பாதவளாக  தயங்கிய படியே ஏற்க்க  மறுக்கின்றாள்.  .
விஷ்ணுவையும் முன்னர் மருத்துவ மனையில் பார்த்திருப்ப தாகவும் கூறி வைக்கின்றாள்.
ஆனால் விஷ்ணு ஒருமாதிரியாக அவளைச் சமாளித்து விட்டு தான் கொண்டுவந்த பணத்தையும் அவளிடம் கொடுத்து விட்டு மிகுதிப் பணத்தை மாதா மாதம் அடைத்து விடுவதாகவும் கூறி தனது வேலை அட்டையையும் அவளிடம் கொடுத்து விட்டு புறப் படுகின்றான்!
குழந்தை அம்முவும் அவனுடன் ஏதோ ஒரு ஈடுபாடு கொண்டவளாக வந்து விடைசொல்லுவதுடன்
பாகம் முடிகின்றது!

ஒட்டு மொத்தமாக ,மிகவும்  ஒரு நல்ல அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்!
நடித்த அனைவரும் தமது தமது பங்கை மிகவும் அழகாகச் செய்திருந்தார்கள்!
குட்டி அம்முவின் பங்கு மிகவும் பாராட்டத் தக்கதென்றே   சொல்லவேண்டும்!

மீண்டும் ஆசிகளுடன்!




No comments:

Post a Comment