Friday, February 26, 2016

உன்னை அறிந்தால்..........பாகம்-6

உன்னை அறிந்தால்..........பாகம்-6

காப்பிக் கடையில் நந்தன் ஆச்சர்யப்பட்டுப் பார்த்த நபர் வேறுயாருமில்லை ,அவனுடன் வேலை பார்க்கும்
அவனது சக ஊழியனும் அவனுக்கு கண்ணிலே காட்டக் கூடாதவனுமான மூர்த்திதான். அவனும் தமிழ்நாட்டுக் காரன்தான் .ஆனால் சென்னைப் பையன்.பெரிய வீட்டுக் காரப் பிள்ளை .ஒரே மகன் .கனடாவுக்கு வந்து பெற்றார்களுடன் மிகவும் வசதியுடன் இருக்கின்றவன் என்பது எல்லாம் நந்தனுக்கும் அவனைப் பற்றித் தெரிந்தறிந்திருக்கும் விடயங்கள் ஆகும். . வேலையில் அவனுடன் பலமுறை வேலை விடயங்களில் முரண்பட்ட கருத்துக்களுடன் இவன் மோதியிருக்கின்றான்.ஆனாலும் அதைக் கூட நந்தனால் சகித்துக் கொண்டிருந்திருக்க முடியும் .
ஆனால் சிலமாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இருந்து ஒரு குழாமாக வங்கி ஊழியர்கள் வந்து இவர்களை சந்திக்க வந்தபோது மூர்த்தி முந்திரிக் கொட்டை மாதிரி அவர்களுக்கு ,அனாவசியமாக வால் பிடித்து , அவர்களிடம் வழிந்தது போல் நடந்து கொண்டது இவனால் மறக்க முடியாத விடயமாக இருந்து கொண்டே இப்போதும் இருப்பதுதான் அவனைக் கண்டாலே இவனுக்கு பிடிக்காமல் இருப்பதற்கு காரணமாக இருந்தது..அதிலும் தனக்கு எல்லாமே தெரிந்தவன் மாதிரி ஒரு கூட்டம் நடக்கும் போது மற்றவர்களை தூக்கி எறிந்து பேசும் தன்மை நந்தனுக்கு எப்போதுமே சகிக்க முடியாதவிடயம்.மற்றவனுக்கு மரியாதையும் ,மற்றவனைப் பேசவிடாமல் மடக்கும் தன்மையும் இடம் கொடுக்க முடியாத தன்மையும் நந்தனால் எப்போதுமே சகிக்க முடியாத விடயம் .இதனால் கூட்டம் முடிந்த பின்னர் மூர்த்தியைத் தனிப்பட சந்தித்து எத்தனையோ முறை அவனை எச்சரித்தும் இருக்கின்றான்.இதனால் மூர்த்திக்கும் நந்தனை மொத்தமாகப் பிடிக்காது என்பது நந்தனின் சிநேகிதன் மோகனுக்கும் சாடைமாடையாகத் தெரிந்திருந்தது..
ஒரே காரியாலயத்தில் வேலை செய்பவர்கள் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் இருந்தால் எப்படியாவது யார்மூலமாகவே யாவது அவர்களது கசப்பான உணர்வுகள் பரிமாறப் பட்டு பிடிக்காதவர்களின் காதுகளைச் சேர்ந்து அடைவது இந்த உலகத்தில் சர்வசாதாரணமாக நடக்கும் விடயமாகும். இதற்கு நந்தனும் மூர்த்தியும் விதி விலக்குகள் அல்ல.
இவனைக் கண்டதும் மூர்த்தி முகத்தைத் திருப்பிக் கொண்டு மறு பக்கம் நடந்தான் .இவனையே பார்த்துக் கொண்டு இருந்த மோகன் ,மூர்த்தியையும் கவனித்துக் கொண்டு இருந்தவன் போல திடீர் என்று "என்ன மச்சான் இவ்வளவு நேரம் ஆகுது எனக்குப் பசிக்குதுடாப்பா " என்று நந்தனுக்கு குரல் கொடுத்து நந்தனின் கவனத்தைத் தன பக்கம் திருப்பும் வேலையில் இறங்கினான்..நந்தனும் அவனது குரலைக் கேட்டதும் வாங்கிய காப்பியையும் ஏதோ வயிற்றுப் பசியை நீக்க வாங்கிய சிற்றுண்டியையும் ஒருதட்டத்தில் வைத்துக் கொண்டு அவனை நெருங்கி அவனுக்கு எதிராக உட்கார்ந்தான்.
மோகன்,குறும்பாக நந்தனைப் பார்த்து சிரித்தான் .பிறகு முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்ற மூர்த்தியைப் பார்த்து ஏளனமாகத் தலையை ஆட்டி விட்டு நந்தனின் காதுக்குள்ளே "என்ன மச்சான் உன்னோட ஹீரோ வந்து இருக்கிறாரோ ?"
என்று கேலியாக கேட்டு வைத்தான்.நந்தனுக்கு இதைக் கேட்க இன்னும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது போல "மோகன் வேணாம் என் வைத் தெரிச்சலைக் கிளப்பாதே "என்று மெதுவாகச் சொல்லிவிட்டு தனக்கே உரிய பாணியில் உரிமையாகத் தன்னுடைய நண்பனைச் சாப்பிடச் சொன்னான்.
அவர்கள் இருவருமே அந்த சம்பாஷணையை முடித்துக் கொண்டு கதைக்க வந்த விடயத்தை நந்தன் மெதுவாக ஆரம்பித்தபோது .மூர்த்தி இவர்களை நோக்கி வருவது தெரிந்தது .இருவரும் தொடங்கிய கதையை பாதியில் நிறுத்தி விட்டு அவனை ஓரக் கண்ணால் நோட்டம் விட்டார்கள். அவன் கிட்ட வரும் போது எதைப் பற்றியும் பேசவேண்டாமே என்பதுதான் நந்தனின் நோக்கமாக இருந்தது. ஆனால் இருவரும் தாம் பேசத் தொடங்கியதை ஒரேயடியாக நிறுத்த வேண்டியதாக அங்கு ஒரு புது விடயம் நடந்து கொண்டிருந்தது.அது வேறு ஒன்று மில்லை.அவர்களைக் கடந்து சென்ற மூர்த்தி இவர்களைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.ஆனால் தன கையில் இருந்த செல்போனில் (CELL PHONE)" ஹாய் நிலா ஹொவ் ஆர் யு ?" (HI NILA HOW ARE YOU ?) என்று மிகவும் லாவகமாக பலநாள் அறிந்த ஒரு பெண்ணுடன் பேசுவது போன்ற தோரணையுடன் பேசிக் கொண்டு சென்றதே காரணமாகும்.நிலா என்ற பெயரை அதுவும் தனது பரம எதிரி என்று நினைக்கும் மூர்த்தி வாய் மூலம் கேட்டதும் நந்தன் ஒருமுறை அதிர்ச்சியடைந்தவன் போலக் காணப் பட்டான் .மோகனுக்கும் நந்தனின் சங்கடம் தெரிந்தது போலும் .உள்ளூர நந்தனைப் புரிந்து கொண்டவன் போல அவனை கேள்விக் குறி நிரம்பிய தோரணையில் பார்த்தான்.நந்தன் குழப்பமான முகத்துடன் தலையை ஆட்டினான்.
தொடரும்...........!.

Thursday, February 11, 2016

UNNAI ARINTHAAL -CHAPTER-5



உன்னை அறிந்தால் .......பாகம் -5
காப்பிக் கடையில் நந்தகோபால் ஒரு ஆச்சர்யத்தை எதிர்நோக்கிய வேளையில் அவனிடத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ- மீட்டருக்கு ( KILO-METER ) க்கு  அப்பால், அவன் உதவி செய்து அனுப்பி வைத்த நிலா  தனது வீட்டுக்கு  முன்னால் அப்போதுதான் வந்து சேர்ந்தாள்.
மிகவும் களைத்தவளாகக்  காணப் பட்ட அவள் தனது காரை விட்டு இறங்கி மிகவும் நேர்த்தியாகத் துப்பரவாக்கப் பட்டிருந்த வீட்டு முற்றத்தையும் ,தனது காரும் பக்கத்தில் ஏற்கனவே  நிறுத்தியிருந்த சிவப்பு நிற "டொயோடா "  (TOYOTA )காரும் பனிவிழுந்த சாயல் இல்லாமலே நிற்பதை எண்ணி பெருமைப் பட்டுக் கொண்டாள்..பக்கத்து வீட்டில் உள்ள பெரியவர் எப்போதும் தன்னுடைய கார் தரிப்பிடம் துப்பரவாக்கும் போது இவளுடையதையும் துப்பரவாக்குவார் என்பது இவளுக்குத் தெரியும்.
அதத் தொடர்ந்து , அப்போதுதான் அவளுக்கு  திடீரென்று  நந்தனின் ஞாபகம்  திரும்பவும் வந்தது போலும்.லேசாக ஒரு முறுவலும் அவளை அறியாமலேயே அவளது முகத்தில் வந்து போனது..ஆனாலும் மெல்ல அதை முகத்தில் இருந்து அகற்றிக் கொண்டு,காரின் கதவுகளை கையில் இருந்த நவீன திறப்பை அமுக்கிப்  பூட்டிக் கொண்டு
வீட்டு   முன் வாசலுக்கு  வந்து சேர்ந்தாள்.
அவளது வீடு மிகவும் சிறிய அழகான ,அமைப்பான வீடாக வெளியில் இருந்து பார்க்கும் போதே தெரிந்தது.பனி முழு நாளும் கொட்டியதால் வீட்டைச் சுற்றி இருக்கும் தோட்டம் முழுதும் பனி நிறைந்த வெள்ளை காடாக காட்சி அளித்தது.. அதுவுமே ஒரு அழகுதான் ,அதையும் ஒருமுறை ரசித்த நிலா ,பூட்டியிருந்த   வீட்டுக்குள் நுழைய வதற்கு முன்னர் வீட்டுத் திறப்பை கையில் எடுத்த கையுடன்" ளோள், ளோள் " என்று என்று அவளது செல்ல நாய்க் குட்டி குரைப்பதைக் கேட்டாள்.அவளது முகம் பிரகாசமாயிற்று.
இது வழமையாக அவளுக்கு நடக்கின்ற விடயம் தான் ".ஓகே ஓகே வெயிட் செகண்ட் ஆம்  கமிங் இன் யு லிட்டில் டைகர் "(OK OK WAIT A SECOND I AM COMING  IN YOU LITTLE  TIGER )என்று  செல்லமாக தன செல்ல நாய்க்  குட்டியைக் கடிந்து கொண்டே கதவைத் திறந்தாள்.இவளைக் கண்டதுமே டைகர் இவள் மேல்  பாய்ந்து அவளது கவனத்தை ஈர்ப்பதற்காக என்னென்னவோ   எல்லாம் செய்தது.அவளும் டைகரை அணைத்து" சரி சரி  என்னை கொஞ்ச நேரம் விடு நான் வந்துடுறேன் "என்று செல்லமாக டைகரை அதட்டி விட்டு தன்னுடைய வெளியுடைகள்.காலணிகள் எல்லாவற்றையும் கழற்றி விட்டு, பிரதான அறைக்குள் போகமுன்னர் உள்ள இடத்தில் வைத்துவிட்டு "அப்பாடா " என்று தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள்.
பின்னர் தன காலையே சுற்றிக் கொண்டு நிற்கும் டைகரை அப்படியே கட்டி அணைத்து தன்னோடு தூக்கினாள். டைகர் நல்ல சாதியைச்  சேர்ந்த குட்டி நாய் .குழந்தை மாதிரி அணைந்து கொள்ளும்.நிலாவுக்கு அது ஒன்றுதான் வீட்டுக்கு வந்தால் துணையாக இருக்கும் . தோழியும் சகோதரியும் அதுதான். அந்த வீட்டில் அவளை விட அவளது தூரத்து சொந்தக் கார ஒரு சித்தியும் குடியிருந்தாள்.சித்தி முறை பெண்ணாக இருந்தாலும் நிலாவுவை விட ஒரு ஐந்து வயது மூத்தவள்.நிலாவைப் போலவே அவளும் இந்தவீட்டில் இருந்து கொண்டு தூரத்தில் வேலை செய்கின்றவள்.
நிலா காலையில் எட்டுமணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பிப் போனால் வீடு வந்து சேர கிட்டத்தட்ட ஆறு மணியாகும்.இவள் புறப்படமுன்னரே வீட்டை விட்டுக் கிளம்பும் இவளது சித்தி மலர் ,வீடு வந்து சேர ஏழுமணியாகிவிடும்.
இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் சந்தித்துக் கொள்ளும் நேரம் குறைவு. சந்திக்கும் போதும் அதிகம் பேசுவது என்பதும் இல்லை.நிலா மிகவும் முன்னோக்கான பெண். ஆனால் மலர் அதற்க்கு எதிர் மாறு. மிகவும் கூச்ச சுபாவம். அதுமட்டுமலாமல் ,
நிலாவுடைய  பாட்டி யாழ்ப்பாணத்தில் இருந்து  நிலாவுக்கு கேட்டுக் கொண்டதன் படி நிலா மலருக்கு தன்னோடு தங்குவதற்கு இடம் கொடுத்து இருந்தாள்.
பாட்டிக்கு யாழ்ப்பாணத்தில் தெரியாதவர்கள் யாருமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.நிலாவுக்கு அப்பாவும் அம்மாவும் இல்லை. இவள் இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே இனக் கலவரப் படுகொலைகளுக்குள் அகப்பட்டு இறந்து விட்ட நிலையில் பாட்டி தான் அவளை கரையாமுள்ளி வாய்க்காலில் இருந்து தப்பி யோடி வந்து கொழும்புக்கு வந்து அங்கே தனக்கு தெரிந்த ஒரு சொந்தக்காரரோடு இருந்து கொண்டு இவளை வளர்த்தெடுத்தாள்.பாட்டியுடைய  சுயநலமற்ற பண்பும்  கரைகடந்த அன்பும் தான் நிலாவை ஒரு நிலைக்கு கொண்டு வந்ததென்று சொல்லலாம்.
அவளுடைய முயற்ச்சியால்  யாரோ தெரிந்தவர்களோடு நிலாவை யும் சேர்த்து கனடாவுக்கு அனுப்பிய பெருமையும் பாட்டியைத்தான் சேரும்.கனடாவுக்கு, நிலா குடியேறி ,  தொடர்ந்து படித்து பட்டதாரியாகி ஒரு வங்கியில் வேலை பார்த்து ,சொந்தத்தில் ,வீடும் வாங்கி இருக்கின்றாள் என்றால் அது எல்லாம் பாட்டி   கொடுத்த தன்னம்பிக்கையும் விடாமுயற்ச்சியும் தான் காரணம். இதனாலே தான் பாட்டி   கேட்டுக் கொண்டதன் படி தன்னைப் போலவே புது வாழ்வு தேடி, புலம் பெயர்ந்த அப்பாவிப் பெண் மலருக்கு தன்னுடையவீட்டிலேயே தங்க இடம் நிலா கொடுக்க சம்மதிக்கும் நிலை வந்தது. 
டைகரை இறுக்கி அணைத்து தன்னுடன் சேர்த்த நிலாவுக்கு  பசியெடுத்தது.அதேநேரம் அவளது டெலிபோனும் ஒலி  எழுப்பியது.யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே டெலிபோனைத் திறந்து பார்த்தாள் நிலா.எப்போதும் இல்லாத புது எண் காட்டியது டெலிபோன்.
தொடரும்...................!