தொடர்கதை-----சிவராணி நிர்மலன்
இதயம் இருக்கும் வரை .........!
பாகம்-1
மூன்றாம் முறையாக தன் மணிக்கட்டில் கட்டியிருந்த கடிகாரத்தை நோட்டம் விட்டான் அரசன்.அவன் முகத்திலும் கண்களிலும் ஒரு அவசரம் தெரிந்தது .காலையிலேயே விரைவில் எழுந்து அலுவலகத்துக்கு போவதற்கு ;அவனை விட யாரையுமே உதாரணமாகக் கூற முடியாது.
அவனும் இப்போதுதான் ஒரு ஆறு மாத மாகத்தான் புதிய ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறான்,
பல்கலைக் கழகப் படப்படிப்பு முடிந்த கையோடு கணக் காளராகவே அவனுக்கு நகரத்திலேயே வேலை கிடைத்ததை இட்டு அவனது அம்மா நாயகிக்கு மிக்க மன மகிழ்ச்சி!
அவனுக்கு அவனது அம்மாவும் ,தங்கை சரளாவும் தான் இருந்தார்கள்.
கடந்த இலங்கைப் போரில் பலர் தமது உறவினர்களை இழந்து .அல்லல் பட்டு,கனடாவுக்கு ,அகதிகளாக புலம் பெயர்ந்து இருந்தாகள் .
அவர்களில் ஒரு குடும்பம் தான் அரசன்,அம்மா நாயகி ,தங்கை சரளா மூவரும்.
அப்பாவை தனது பதினைந்து வயதிலேயே இலங்கை யின் அரசியல் அலங்கோலத்துக்கு பறி கொடுத்து விட்டு அம்மா தங்கையுடன் வந்த கதை தான் அரசனின் கதை.
இங்கு வந்து குடியேறி சாதித்த காரியங்கள் கணக்கில் அடங்காதவை,ஒரு சகாப்தமே படைத்தனர் என்று சொன்னாலும் மிகையாகாது!பட்ட இம்சைகள் ,பல.வேதனைகள்,துன்பங்கள்,அவமானங்கள்,பலபல!
ஆனாலும் அம்மா நாயகியின் வன்மமும்,உறுதியும் தான் இந்தக் குடும்பத்தின் அவல நிலையை மேலே கொண்டுவந்தது என்று சொன்னால் மிகையாகாது!
வந்த புதுதில்,புதுச் சூழல்,புதுக் கலாச்சாரம்,பண்பாடுகள்,பல மொழிகள் பேசும் சூழல் என்று பல கஷ்ட்டங்களையும் தாண்டித்தான் ஒருமாதிரியாக இவர்களது குடும்பம் நிலைப் பட்டது!
இரண்டு இளம் வயது குழந்தைகளை தன கண்முன்னால் வைத்துக் காப்பாற்றி,உணவு ஊட்டி ,தங்க இடம் தேடி கொண்டு ,பள்ளிக்கு அனுப்பி,
இன்று தட்டம் தனியாளாய் இருவரையும் நல்ல நிலைக்குக் கொண்டுவந்து விட்டு இப்போது தனது சொந்தவீட்டில் அவர்களது வாழ்க்கைகளின் அடுத்த படிக்கான ஆயத்தங்களை நாயகி செய்யத் தொடங்கி இருந்தாள்.
இருவருமே உயர்ந்த உத்தியோகங்களை வகிப் பவர்களாக இருந்தார்கள்.
மூத்தான் அரசன் கணக்களாராக ஒரு பிரசித்தி பெற்ற வங்கியிலும்,
தங்கை சரளா ஒரு பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவ மனையில் .நிர்வாக அதிகாரியாகவும் இருககின்றார்கள் .
கைநிறைய சம்பாதிக்கிறார்கள்.அம்மா பட்ட கஷ்ட்டத்துக்கு அவளை ஒரு குறையுமில்லாமல் பார்த்துக் கொள்ளுகிறார்கள்.
திங்கள்தொடங்கி வெள்ளிவரை காலையில் எட்டுமணிக்குப் புறப்பட்டால்
மாலை ஆறு மணியளவில் தான் வீடு வந்து சேர்வார்கள்.
இருவரும் வேறு ,வேறாகப் போய் தமது தமது வண்டிகளில் வீடு வந்து சேர்வதுதான் வழக்கமான அவர்களின் ஒழுங்கு .
அம்மாவைக் காக்க வைப்பதும் இல்லை.
ஏதாவது பிரச்சனை என்றால் முன்கூட்டியே அம்மாவுக்கு தொலை பேசி மூலம் அறிவித்து ஆறுதல் படுத்தியும் விடுவார்கள்.
ஒருவருக்கு ஒருவர் உலக விடயங்கள்,வேலை விடயங்கள் எல்லாமே பகிர்ந்து கொள்ளுவார்கள் என்றே சொல்லலாம் .
ஒட்டு மொத்தமாக ஒரு அற்புதமான ,ஏன் யாருமே பார்த்துப் பொறாமைப்
படக் கூடிய குடும்பம் என்றே சொல்லவேண்டும்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படித் தோன்றினாலும்,
நாயகியைப் பொறுத்த வரையில் இவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்
இன்னும் இருந்தன.
நாயகிக்கு கனடாவுக்கு வந்த இந்தப் பத்து வருடங்களில் உறவினர் என்று சொல்லக் கூடியதாகவும்,சிநேகிதிகள் என்று சொல்லக் கூடியதாகவும் ஒரு சிலரே இருந்தனர்.
அவர்களில் முக்கியமாக அவளோடு வேலை செய்தபோது பழக்கப் பட்ட ஒரு இந்திய தமிழ் பெண் மாலாவும் மிகவும் தூரச் சொந்தம் என்று கொண்டாடி வரும் கமலாவின் குடும்பமுமே முதல் இடம் வகித்தார்கள்.
நாயகியும் கணவன் இல்லாத காரணத்தால் தானும்,தனது குடும்பமும் என்று மிகவும் அமைதியாகவும்,ஆடம்பரம் இல்லாமலும் வாழ்ந்து காலம் போயிற்று.
கமலா வுக்கும் நாயகியின் வயதுதான் இருக்கும். ஆனால் அவளது கணவர் இன்னும் இலங்கையில் இருப்பதாகத்தான் கமலா அவளுக்கு சொல்லியிருந்தாள் .அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்ளுவதையும் கேட்டிருக்கின்றாள் .
கமலாவுக்கும் அரசனின் வயதிலும்,சரளாவின் வயதிலும் இரண்டு பெண்குழந்தைகள் இருந்தன.
இலங்கையிலிருந்து வந்த காலம் தொடக்கத்திலேயே ஒரே கட்டிடத்தில் வசித்ததால் நால்வருக்கும் நல்ல பழக்கமும் நட்பும் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது!
அடிக்கடி நால்வரும் சந்ததிக்கும் சந்தர்ப்பங்களும் கிடைத்தன.
கமலாவின் பெண்களுக்கு உமா ,உஷா என்பன பெயர்கள். மிகவும் அழகான ,அடக்க மான பெண்கள்.உமாவை விட உஷா கொஞ்சம் துடிப்பு கூடியவள்.
சரளாவின் உயிர்த் தோழி என்றும் சொல்லலாம்.
உமா அம்மாவுக்கு ஒத்தாசையாக இருப்பவள்.எப்போதும் அம்மாவுக்குப் பின்னாலேயே பெரியவளான பின்பும் திரிவாள் .பிறகு படித்து முடித்து
பட்டதாரிகளாகி தமக்குத் தமக்கு என்று வேலைகளையும் அலுவலகங்களில் எடுத்துக் கொண்டு தமக்கு என,மோட்டர் வண்டிகளையும் வாங்கிக் கொண்டு
அவர்களின் காலமும் போய்க் கொண்டிருக்கிறது!
இவர்களை விட நாயகிக்கு தனது உயிர்த் தோழி என்று சொன்னால் அவளுடன் வேலை செய்து நட்புக் கொண்டமாலா என்றே சொல்ல வேண்டும் .
மாலாவும் அவளது கணவரும் மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர்கள் ,ஆனால் மாலாவின் கணவர் வெளியூரில் வேலை கிடைத்து தமது குடும்பத்துடன் பத்துவருடங்களுக்கு முன்னர் கனடா வந்து சேர்ந்திருந்தார்கள்
அவர்களுக்கு கண்ணே கண்ணு ஒண்ணே .ஒண்ணு என்று சக்தி என்ற மகள் இருக்கின்றாள். அழகோ அவள்! ,ஆனால் வாயோ வாயும்தான்.
அவள் இந்த நாலு பேரையும் விட வயதிலும் சின்னவள் ஆனால் பேசும் போது எல்லோரையும் விடவயது மூத்தவள் போல பேசும் பாவம் உண்டு.
இந்த ஐந்து இளம் வட்டங்களும் ஒருவர் ஒருவர் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள் .
பத்து வருடங்களாக அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்துப் பழகி வரும் இந்த மூன்று குடும்பத்தில் நடக்கும் வாழ்க்கைப் பிரச்சனைகள்,உணர்வுகள்,போட்டிகள்,தான் இந்தத் தொடர்கதையின் மையப் புள்ளிகளாகும் .
இப்போது ,மணிக் கடிகாரத்தை நான்காம் முறையாகப் பார்த்த அரசனை நோட்டம் விட்ட அம்மா நாயகி "என்னப்பா யாரைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாய் " என்று கேட்டாள்.
அப்போது காலை எட்டுமணி ,அரசன் வேலைக்கு புறப்படும் நேரம் என்றும் அவளுக்கு தெரியும் .
இதுவே முதல் முறையாக அவன் ஏதோ ஆதங்கப் படுவது போன்ற உணர்வு
அவளுக்குத் தெரிந்தது!
அவள் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்ல முன்னரே,மாடியில் இருந்து
வேலைக்கு ஆயத்தமாகிக் கொண்டே கீழே வந்த சரண்யா "அம்மா உங்களுக்கு அண்ணா இன்னும் சொல்லவில்லையா ?என்று கேட்டாள் .
"இல்லையேம்மா என்ன விஷயம்"? என்று மகளை ஆர்வத்துடன் கேட்டவளை
பார்த்து குறும்புடன் அழகாகச் சிரித்த சரளா "அம்மா அது ஒரு பெரிய ரகசியம் .ஆனால் உங்களுக்கு பிடிக்கும் "என்று ஒரு ஆசையைக் காட்டி விட்டு"அண்ணா நீ சொல்லப் போறீங்களோ இல்லை நான் சொல்லவா ?"என்று அண்ணாவைப் பார்த்து அவனைக் கேலி செய்வது போல சிரித்தாள் .
அண்ணன் அரசனோ தங்கையைக் கெஞ்சுவது போல முகத்தை சைகை செய்தான்.
அம்மாவோ இவர்கள் இருவரதும் இந்தப் புதுவிதமான சம்பாஷணையில் ,குழம்பி நின்றாள்
தொடரும் ....!
இதயம் இருக்கும் வரை .........!
பாகம்-1
மூன்றாம் முறையாக தன் மணிக்கட்டில் கட்டியிருந்த கடிகாரத்தை நோட்டம் விட்டான் அரசன்.அவன் முகத்திலும் கண்களிலும் ஒரு அவசரம் தெரிந்தது .காலையிலேயே விரைவில் எழுந்து அலுவலகத்துக்கு போவதற்கு ;அவனை விட யாரையுமே உதாரணமாகக் கூற முடியாது.
அவனும் இப்போதுதான் ஒரு ஆறு மாத மாகத்தான் புதிய ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறான்,
பல்கலைக் கழகப் படப்படிப்பு முடிந்த கையோடு கணக் காளராகவே அவனுக்கு நகரத்திலேயே வேலை கிடைத்ததை இட்டு அவனது அம்மா நாயகிக்கு மிக்க மன மகிழ்ச்சி!
அவனுக்கு அவனது அம்மாவும் ,தங்கை சரளாவும் தான் இருந்தார்கள்.
கடந்த இலங்கைப் போரில் பலர் தமது உறவினர்களை இழந்து .அல்லல் பட்டு,கனடாவுக்கு ,அகதிகளாக புலம் பெயர்ந்து இருந்தாகள் .
அவர்களில் ஒரு குடும்பம் தான் அரசன்,அம்மா நாயகி ,தங்கை சரளா மூவரும்.
அப்பாவை தனது பதினைந்து வயதிலேயே இலங்கை யின் அரசியல் அலங்கோலத்துக்கு பறி கொடுத்து விட்டு அம்மா தங்கையுடன் வந்த கதை தான் அரசனின் கதை.
இங்கு வந்து குடியேறி சாதித்த காரியங்கள் கணக்கில் அடங்காதவை,ஒரு சகாப்தமே படைத்தனர் என்று சொன்னாலும் மிகையாகாது!பட்ட இம்சைகள் ,பல.வேதனைகள்,துன்பங்கள்,அவமானங்கள்,பலபல!
ஆனாலும் அம்மா நாயகியின் வன்மமும்,உறுதியும் தான் இந்தக் குடும்பத்தின் அவல நிலையை மேலே கொண்டுவந்தது என்று சொன்னால் மிகையாகாது!
வந்த புதுதில்,புதுச் சூழல்,புதுக் கலாச்சாரம்,பண்பாடுகள்,பல மொழிகள் பேசும் சூழல் என்று பல கஷ்ட்டங்களையும் தாண்டித்தான் ஒருமாதிரியாக இவர்களது குடும்பம் நிலைப் பட்டது!
இரண்டு இளம் வயது குழந்தைகளை தன கண்முன்னால் வைத்துக் காப்பாற்றி,உணவு ஊட்டி ,தங்க இடம் தேடி கொண்டு ,பள்ளிக்கு அனுப்பி,
இன்று தட்டம் தனியாளாய் இருவரையும் நல்ல நிலைக்குக் கொண்டுவந்து விட்டு இப்போது தனது சொந்தவீட்டில் அவர்களது வாழ்க்கைகளின் அடுத்த படிக்கான ஆயத்தங்களை நாயகி செய்யத் தொடங்கி இருந்தாள்.
இருவருமே உயர்ந்த உத்தியோகங்களை வகிப் பவர்களாக இருந்தார்கள்.
மூத்தான் அரசன் கணக்களாராக ஒரு பிரசித்தி பெற்ற வங்கியிலும்,
தங்கை சரளா ஒரு பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவ மனையில் .நிர்வாக அதிகாரியாகவும் இருககின்றார்கள் .
கைநிறைய சம்பாதிக்கிறார்கள்.அம்மா பட்ட கஷ்ட்டத்துக்கு அவளை ஒரு குறையுமில்லாமல் பார்த்துக் கொள்ளுகிறார்கள்.
திங்கள்தொடங்கி வெள்ளிவரை காலையில் எட்டுமணிக்குப் புறப்பட்டால்
மாலை ஆறு மணியளவில் தான் வீடு வந்து சேர்வார்கள்.
இருவரும் வேறு ,வேறாகப் போய் தமது தமது வண்டிகளில் வீடு வந்து சேர்வதுதான் வழக்கமான அவர்களின் ஒழுங்கு .
அம்மாவைக் காக்க வைப்பதும் இல்லை.
ஏதாவது பிரச்சனை என்றால் முன்கூட்டியே அம்மாவுக்கு தொலை பேசி மூலம் அறிவித்து ஆறுதல் படுத்தியும் விடுவார்கள்.
ஒருவருக்கு ஒருவர் உலக விடயங்கள்,வேலை விடயங்கள் எல்லாமே பகிர்ந்து கொள்ளுவார்கள் என்றே சொல்லலாம் .
ஒட்டு மொத்தமாக ஒரு அற்புதமான ,ஏன் யாருமே பார்த்துப் பொறாமைப்
படக் கூடிய குடும்பம் என்றே சொல்லவேண்டும்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படித் தோன்றினாலும்,
நாயகியைப் பொறுத்த வரையில் இவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்
இன்னும் இருந்தன.
நாயகிக்கு கனடாவுக்கு வந்த இந்தப் பத்து வருடங்களில் உறவினர் என்று சொல்லக் கூடியதாகவும்,சிநேகிதிகள் என்று சொல்லக் கூடியதாகவும் ஒரு சிலரே இருந்தனர்.
அவர்களில் முக்கியமாக அவளோடு வேலை செய்தபோது பழக்கப் பட்ட ஒரு இந்திய தமிழ் பெண் மாலாவும் மிகவும் தூரச் சொந்தம் என்று கொண்டாடி வரும் கமலாவின் குடும்பமுமே முதல் இடம் வகித்தார்கள்.
நாயகியும் கணவன் இல்லாத காரணத்தால் தானும்,தனது குடும்பமும் என்று மிகவும் அமைதியாகவும்,ஆடம்பரம் இல்லாமலும் வாழ்ந்து காலம் போயிற்று.
கமலா வுக்கும் நாயகியின் வயதுதான் இருக்கும். ஆனால் அவளது கணவர் இன்னும் இலங்கையில் இருப்பதாகத்தான் கமலா அவளுக்கு சொல்லியிருந்தாள் .அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்ளுவதையும் கேட்டிருக்கின்றாள் .
கமலாவுக்கும் அரசனின் வயதிலும்,சரளாவின் வயதிலும் இரண்டு பெண்குழந்தைகள் இருந்தன.
இலங்கையிலிருந்து வந்த காலம் தொடக்கத்திலேயே ஒரே கட்டிடத்தில் வசித்ததால் நால்வருக்கும் நல்ல பழக்கமும் நட்பும் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது!
அடிக்கடி நால்வரும் சந்ததிக்கும் சந்தர்ப்பங்களும் கிடைத்தன.
கமலாவின் பெண்களுக்கு உமா ,உஷா என்பன பெயர்கள். மிகவும் அழகான ,அடக்க மான பெண்கள்.உமாவை விட உஷா கொஞ்சம் துடிப்பு கூடியவள்.
சரளாவின் உயிர்த் தோழி என்றும் சொல்லலாம்.
உமா அம்மாவுக்கு ஒத்தாசையாக இருப்பவள்.எப்போதும் அம்மாவுக்குப் பின்னாலேயே பெரியவளான பின்பும் திரிவாள் .பிறகு படித்து முடித்து
பட்டதாரிகளாகி தமக்குத் தமக்கு என்று வேலைகளையும் அலுவலகங்களில் எடுத்துக் கொண்டு தமக்கு என,மோட்டர் வண்டிகளையும் வாங்கிக் கொண்டு
அவர்களின் காலமும் போய்க் கொண்டிருக்கிறது!
இவர்களை விட நாயகிக்கு தனது உயிர்த் தோழி என்று சொன்னால் அவளுடன் வேலை செய்து நட்புக் கொண்டமாலா என்றே சொல்ல வேண்டும் .
மாலாவும் அவளது கணவரும் மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர்கள் ,ஆனால் மாலாவின் கணவர் வெளியூரில் வேலை கிடைத்து தமது குடும்பத்துடன் பத்துவருடங்களுக்கு முன்னர் கனடா வந்து சேர்ந்திருந்தார்கள்
அவர்களுக்கு கண்ணே கண்ணு ஒண்ணே .ஒண்ணு என்று சக்தி என்ற மகள் இருக்கின்றாள். அழகோ அவள்! ,ஆனால் வாயோ வாயும்தான்.
அவள் இந்த நாலு பேரையும் விட வயதிலும் சின்னவள் ஆனால் பேசும் போது எல்லோரையும் விடவயது மூத்தவள் போல பேசும் பாவம் உண்டு.
இந்த ஐந்து இளம் வட்டங்களும் ஒருவர் ஒருவர் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள் .
பத்து வருடங்களாக அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்துப் பழகி வரும் இந்த மூன்று குடும்பத்தில் நடக்கும் வாழ்க்கைப் பிரச்சனைகள்,உணர்வுகள்,போட்டிகள்,தான் இந்தத் தொடர்கதையின் மையப் புள்ளிகளாகும் .
இப்போது ,மணிக் கடிகாரத்தை நான்காம் முறையாகப் பார்த்த அரசனை நோட்டம் விட்ட அம்மா நாயகி "என்னப்பா யாரைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாய் " என்று கேட்டாள்.
அப்போது காலை எட்டுமணி ,அரசன் வேலைக்கு புறப்படும் நேரம் என்றும் அவளுக்கு தெரியும் .
இதுவே முதல் முறையாக அவன் ஏதோ ஆதங்கப் படுவது போன்ற உணர்வு
அவளுக்குத் தெரிந்தது!
அவள் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்ல முன்னரே,மாடியில் இருந்து
வேலைக்கு ஆயத்தமாகிக் கொண்டே கீழே வந்த சரண்யா "அம்மா உங்களுக்கு அண்ணா இன்னும் சொல்லவில்லையா ?என்று கேட்டாள் .
"இல்லையேம்மா என்ன விஷயம்"? என்று மகளை ஆர்வத்துடன் கேட்டவளை
பார்த்து குறும்புடன் அழகாகச் சிரித்த சரளா "அம்மா அது ஒரு பெரிய ரகசியம் .ஆனால் உங்களுக்கு பிடிக்கும் "என்று ஒரு ஆசையைக் காட்டி விட்டு"அண்ணா நீ சொல்லப் போறீங்களோ இல்லை நான் சொல்லவா ?"என்று அண்ணாவைப் பார்த்து அவனைக் கேலி செய்வது போல சிரித்தாள் .
அண்ணன் அரசனோ தங்கையைக் கெஞ்சுவது போல முகத்தை சைகை செய்தான்.
அம்மாவோ இவர்கள் இருவரதும் இந்தப் புதுவிதமான சம்பாஷணையில் ,குழம்பி நின்றாள்
தொடரும் ....!






