Saturday, December 06, 2014

EPISODE-437
அத்தியாயம் -437

இன்றைய அத்தியாயம் நட்பின் எல்லையை அதன் உண்மையான அர்த்தத்தை
எடுத்துக் காட்டுவதாக அமைந்தது!

காட்சி-1

தன்னைத்தானே பார்த்துக்கொள்ளுவேன் என்று  கசந்து பேசும் கார்த்திகை
விட்டு விட்டு போகாமல் தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் படி விஷ்ணு கேட்கும் மிகவும்   உருக்கமான காட்சி!
கைகுலுக்கக் கேட்ட விஷ்ணுவை,சீண்டி விட்டு  தன் இருகைகளாலும் அணைத்துக்  கொள்ளும் கார்த்திக்கின் செய்கை விஷ்ணுவை மிக்க
சந்தோஷத்தில் ஆழ்த்துகின்றது!
இருவரும் ஒருவரை  ஏற்றுக் கொள்ளும் காட்சி மிக்க உன்னதமான காட்சியாகும்!
காட்சி-2
பின்னர்  அன்பு மாமா,கட்டை புலியுடன் சேர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர்
பேசி  தம்முடைய மனதில்லுள்ளதைஎல்லாம் கொட்டித் தீர்ப்பது மிகவும்
நன்றாகவே இருக்கிறது!
நகைச் சுவையுடன் சேர்த்து அருமையாக நண்பர்களின்  கோப தாபங்களை
தீர்த்து அவர்களை ஒன்று சேர்த்த முறை இயக்குனரின் திறமை என்று தான் சொல்லவேண்டும்!

காட்சி -3
மாதவியின் மனப் புழுக்கத்தை பற்றியது !

ராஜி ,கார்த்திக்கை தேடி வந்து அவனது கையை பிடித்துப் பார்ப்பதையும்
அவனை அக்கறையுடன் நலம் விசாரிப்பதை நேரே காண்கிறாள்.
அதை ஒட்டுக் கேட்பதையும் ,மறைந்திருந்து பார்ப்பதைக் கண்டு பவித்திரா அவளைத் தாறுமாறாகத் திட்டுவதோடு கார்த்திக்,ராஜி விடயத்தில் மூக்கை
நுழைக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கிறாள்!
ஆனால் மாதவியோ அதைப்பற்றி அசட்டை செய்யாமல் விதண்டாவாதம் கதைப்பதோடு பவித்திராவிடம்,ராஜியைப் பற்றியும்  அவதூறாகப் பேசுவதுடன்,ராஜி தனக்கும், கார்த்திக்கும் இடையில் உள்ள உறவில் குறுக்கிடுவதாகவும் முறையிடுகிறாள்.
அதைக் கேட்டு பவித்திராவுக்கு மாதவியின் முட்டாள்தனத்தை எண்ணி
சிரிப்பு வருகிறது!
அவள் சிரிப்பதைக் கண்டு கோபமுறும் மாதவி ,எனக்கு சொல்லும் புத்திமதிகளை வேண்டுமென்றால் ராஜிக்குப் போய் சொல்லும் படியும்
சவால் விடுகிறாள்!

காட்சி -4
இந்தக் காட்சியில் கார்த்திக் ராஜிக்கு அண்மையில் வந்து கொண்டிருந்த அனாமதேய தொலை பேசி அழைப்புக்களை பற்றி மிக மும்மரமாக விசாரிக்கத் தொடங்குகிறான்!
அந்த நபர் யார் என்பது  தெரிந்தும் அன்புமாமா அதை கார்த்திக்கு சொல்ல மறுக்கின்றார்.
ஆனால் ஏதோ விதமாக அது  அவர்களது அலுவலகத்திலேயே வேலை புரியும் சந்தோஷ் என்பதை கண்டு பிடித்து அவனையே எச்சரிப்பதுடன்
அவனை இந்த வேலை செய்வித்தவன் யார் என்பதையும் கண்டு பிடிப்பேன் என்று சந்தோஷையே எச்சரிக்கிறான்! 
கடைசிக் காட்சியில் கார்த்திக் சந்தோஷை எச்சரித்து விட்டுப் போன கையுடன் சந்தோஷுக்கு யாரோ தொலை பேசியில் அழைத்து கார்த்திக்கை பற்றி விசாரிப்பது போல காட்சி இருந்தது. அவனும்  தன்னை எங்கிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தவன்  கண்காணிப்பதை இட்டு  ஆச்சரியப் பட்டு இசாரிக்கின்ர மர்மத்துடன்  காட்சி முடிகிறது!
நாளை நடப்பதைப்  பார்ப்போம்!

மீண்டும் ஆசிகளுடன்!

No comments:

Post a Comment