Sunday, December 28, 2014

 EPISODE-453 TAMIL DEC/25/2014


GOOD MORNING ALL !
I JUST MANAGED TO DO THE TAMIL VERSION OF THE XMAS DAY EPISODE!
FRIEDAY EPISODE WILL FOLLOW .THANK YOU !

EPISODE=453
அத்தியாயம்-453  25/DEC/2014 -X MAS DAY

இந்த அத்தியாயம் நேற்றயத்தின்  தொடர்ச்சியாகவும்கார்த்திக்கும்  ராஜிக்கும் இடையில் நடக்கும் ஒரு சந்திப்பில் , உணர்வுபூர்வமான வார்த்தைப்
பரிமாற்றங்களை பற்றியதாகவும் அமைந்தது!

காட்சி-1
மருத்துவமனையில் அடிபட்டு அனுமதிக்கப் பட்டு ,உயிருக்குப்   போராடிக்  கொண்டு இருக்கும் அவனது, மனைவிக்கும் அன்பு மாமாவுக்கும்
இடையில் நடக்கும் சம்பாஷணை பற்றியது.
அன்பு மாமா விடம் ,மனைவி அறுவைச் சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவியவரைப் பற்றி மிகும் ஆவலுடன் அறிந்து கொள்ள முற்படுகின்றாள் .
ஆனால் அன்புமாமா ஒருமாதிரிச் சமாளித்து விடுகின்றார்.
விஷ்ணு வும் அவர்கள் பேசுவதைக்  கேட்டு அவனும் ஒன்றும் சொல்ல முடியாமல் தவிக்கின்றான். 

காட்சி -2
கார்த்திக் குற்ற உணர்ச்சியால் தவிக்கும் விஷ்ணுவை ஒருமாதிரி சம்மாளித்து ,ஆறுதல் சொல்லி அவனைக் காரில் படுத்து தூங்கச் சொல்லிவிட்டுக் காவல் இருக்கின்றான்!
பின்னர் தானே அவனை தேற்றி அலுவலகத்துக்கே அழைத்துச் செல்கின்றான்.
காட்சி-3
மணிமேகலை விஷ்ணுவிடம் வந்து பேசும் காட்சி!
அவள்பல முறை முயன்றும் அவனைத் தொடர்பு கொள்ள முடிய வில்லை என அவனிடம் கூறுகின்றாள்!
ஆனால் அவன் அவளிடம் தனது தற்போதைய நிலையையும் தான் படும் குற்ற உணர்வின் உச்ச நிலையையம் ,அடிபட்டவனின் நிலையையும் எடுத்துச் சொல்லும் போது,அவனது எண்ணம் ,சிந்தனை, கவலை எல்லாம் இப்போது  மணிமேகலையை விட இப்போதைய அவனது  நிலைமை பற்றியதே  என்பது அவளுக்குப் புரியக் கூடியதாக இருந்தது! ஆனாலும் அவள் தனது வேதனையையும் சொல்லித் தீர்த்துவிட்டுச் செல்கின்றாள்!

காட்சி-4
இதுவே இந்த அத்தியாயத்தின் முக்கியமான ஒரு கட்டம் எனவும் சொல்லலாம்.
கார்த்திக் விஷ்ணுவின் நிலைமை குறித்து ,உண்மையாகவே அவனுக்காக உணர்வுபூர்வமாக ,மன வருத்தப் படுகின்றான்!அந்த யோசனையில் கூட்ட அறைக்குள் இருக்கும்போது ,ராஜி அவனைத் தேடிக் கொண்டு வருகின்றாள்.
அதை எதிர்பார்க்காதவனாக ,அவன் அறையைப் பாவிக்க வேண்டு மென்றால்
பாவிக்கலாம் என்று எதேட்சையாக சொல்கின்றான்.
ஆனால் ராஜியோ,அவன் ஒரு முக்கியமான கூட்டத்துக்கு வரவில்லை என்பதாலும் ,அவனது முகத்தில் ஏதோ ஆதங்கம் இருப்பதை  அறிந்தது போலும்,அவனை விசாரிக்கின்றாள் .அவளது குரலில்  வழமையான  கவலையும் கரிசனையும் தெரிகிறது.
ஆனால் அவனோ முதலில் அவளது கேள்விக்கு பதில் அளிக்க விரும்பாதவன் போல் நடந்து கொண்டாலும்,அவள் ஒரே வீட்டில் இருந்து  கொண்டு ஏதாவது பிரச்சனை  என்றால் தெரியாமல் இடுப்பது சரியில்லை என்ற தோரணையில் அவனை விசாரிக்கின்றாள் .அதை அவனிடமும் கூறுகின்றாள்.அவனோ  அதன் பின்பு தான் வாயைத் திறந்து விஷ்ணுவுக்குத்தான் பிரச்சனை என்பதைக் கூறவே அவள் என்ன பிரச்சனை என்று கேட்கவே அவன் இன்னும் சொல்லத் தயங்குகின்றான் அது அவளிக்கு மனதுக்கு கஷ்ட்டமாக இருப்பது தெரிய,” சொல்லத் தேவையில்லை என்றால் நான்  கட்டாயப் படுத்த மாட்டேன்”   என்று கூறுகின்றாள்!
இங்கே நாம் ஒரு  முக்கியமான உணர்ச்சிப் போராட்டத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்!
முன்னர் போல அவன் அவளிடம் எந்த தகசியத்தையுமே  சொல்லுவதற்கு தயங்குவது அவர்களிடையே வந்திருக்கும் உணர்வுப் பிளவுகளக் காட்டுகின்றதும் அது அவளது இதயத்தைக் குத்திக் கிழிப்பதும் தெரிகிறது.
ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாது அவள்  தொடர்கின்றாள்.
அவள் அந்தக் கேள்வியை அவனிடம் தன கண்கள் மூலம் கேட்கின்றாள்.
அந்த வீச்சின்,பலத்தில் , அவன் உணர்ந்து கொண்டும் ஆனால் மீண்டும் தயங்கியபடி அதை வெளியே சொன்னால் விஷ்ணுவுக்கு ஆபத்துஎன்பதைச் சொல்லுகின்றான்.
முந்திய கால கட்டங்களில் எந்த ரகசியமும் இருவருக்கும் இடையில் இருந்ததில்லை ,அதைப் பகிர்ந்து கொள்ளத் தயங்கியதுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!அன்னியோன்னியம் மங்கியதுவே இதக்குக் காரணம் வேறொன்றுமில்லை!!
அதைத் தொடர்ந்து ராஜி அவனிடம் தன மனதைத் திறந்து பேசத் தொடங்குகின்றாள்
தன்னிடம் மட்டும் ஏன் அவனால் மனம் திறந்து பேசமுடியாமல் இருப்பதென்பதையும்,தன்னை மட்டும் ஏன் மன்னிக்க முடியாமல் இருப்பதென்பதையும் அவள் திடீரென்று கேட்டதுமே ,கார்த்திக் திகைப்புடன் அவளை பார்க்கின்றான்! அவனதுமனதுக்குள் என்ன ஓடியதோ தெரியவில்லை!
தன்னை அவள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லைஎன்பதுவும்,தனது  இதயம் இன்னும் இருவருக்குள்ளும் நடந்த வேதனையான விடயங்களால்
நொந்து இன்னும் ரணமாகி  இருப்பதென்பதுவும் இப்போது நடந்திருக்கும் விடயம் மீண்டும் எதையோ புதுப்பிக்கிறது என்பதும் காட்டும் உணர்வுகளோடு அவளை அவன் மிக மிக ஆழமான கண்களோடு நோக்குவதில் தெரிந்தது. 
இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக அளப்பது போல் பார்த்துக் கொண்டார்கள்.
அன்று விவாக ரத்து விடயமாக ஆலோசகரிடம் செல்ல வேண்டியதையும் அவள் கார்த்திக்குக்கு ஞாபகப் படுத்துகின்றாள்.
எப்படியும் வரும்படியும் வராவிட்டாலும்  தான் தனியே போய் ஓரு முடிவு எடுப்பேன் என்பது போலவும் சொல்கின்றாள்.
அவன் எப்படியும் தான் வந்து விடுகின்றேன் என்று சொல்கின்றான்!
இதில் நான் அவதானித்த அளவில் ஒரு சில நிமிடங்கள் தான் இவர்களது காட்சிகள் இருந்தாலும்.ஒருவரை ஒருவர் உயிர் போலக்  காதலித்து விட்டு
 வாழ்க்கையை மேலே தொடர்ந்து வாழ்வதற்கு நிபந்தனைகள் போட்டுக் கொண்டு ,அவசப் பட்டுக் கொண்டு ,ஆழ்ந்து ஒருவரை  ஒருவர் உணர்வதற்கு முயலாமல் குற்றம் கண்டு பிடிக்கும் ராஜியின் கதாபத்திரத்தையும் ,மனம் நொந்து தன்னை இவள் புரிந்து   கொள்ளுகின்றாள் இல்லையே என்று உள்ளுக்குள் புழுங்கும் கார்த்தியையும் தான்  நான் காண முடிந்தது!
இருவருக்கும் காரணங்கள் பல .
ஆனால் காதலின் விலை என்ன? அங்கேதான் இவர்களது எதிர்கால
வாழ்க்கையின் சிறப்பு தங்கி இருக்கிறது என்பதை தான் நாம் பார்க்க முடிந்தது!

ஆனாலும் தமது உணர்வுபூர்வமான,அற்புதமான நடிப்பால் சிந்திக்க வைக்கும்
கார்த்திக்கும்,சுருதிக்கும் பாராட்டுக்கள்!
வழமை போல் காத்திருப்போம்!
மீண்டும் ஆசிகளுடன்!



 

No comments:

Post a Comment