Friday, December 26, 2014

EPISODE -452 


EPISODE-452 TAMIL
அத்தியாயம்-452- WEDNESDAY 24/DEC/2014
இன்றைய  அத்தியாயம்  முழுக்க முழுக்க விஷ்ணுவின் விபத்தைப் பற்றியதுதான்!

காட்சி -1
அன்புமாமாவுக்கும் கார்த்திக்கும் என்ன நடந்தது என்பதை விளக்கும் விஷ்ணு தான் அடிபட்டவனை விட்டு விட்டு சென்றதற்கு மணிமேகலை காரில் இருந்ததும் ஒரு காரணம் என்று கூறுகின்றான் அங்கே சுத்திவர ஆட்கள் வந்ததால் அவர்கள் எப்படியாவது அவனைக் காப்பாற்றி விடுவார்கள் என்று நினைத்ததாகவும் சொல்கின்றான் !இதைக் கேட்டு அவனது பொறுப்பிலாத தனத்த்தை குறித்து விஷ்ணு வை ,கார்த்திக் முதலில் திட்டித் தீர்த்தாலும்,விஷ்ணுவின் நிலைமையை உணர்ந்து கொண்டு அவனுக்கு ஆறுதலும் சொல்லுகினான்!
ஆனால் அடிபட்டவனைப் போய் பார்ப்பது தான் சரிஎன்ற முடிவுடன்  மூவரும் அவனிச் சேர்த்திருக்கின்ற மருத்துவமனைக்குப் போகின்றனர்.

காட்சி-2
அங்கு போய்ச் சேர்ந்ததும் அன்பு மாமா அங்கு வேலை செய்கின்ற வனிடம்  கேட்டு அவனை அனுமதித்து உள்ள அறைக்கு வெளியில் வந்து சேருகின்றனர்.
அடிபட்டவனின் நிலைமை மோசமாக இருப்பதாக வேலை செய்பவன் சொல்லி வைக்கின்றான்.
விஷ்ணு அதைக் கேட்டு அங்கலாய்க் கின்றான் .அவனைச் சமாதானப் படுத்த  கார்த்திக்கும் அன்புமாமாவும் பெரிதும் பாடு படுகின்றனர்.
மருத்துவமையில் அனுமதிக்கப் படும் அவனோடு அவனது இளைய மனைவியையும்  அவன் குழந்தையையும் மூவரும் காண்கின்றனர்!
மனைவி அழுது கொண்டு இருப்பதையும் ,குழந்தை வேதனையுடன் இருப்பதையும் கண்டு விஷ்ணுவுக்கு இப்போது குற்ற உணர்ச்சி இன்னும் மிகையாகிறது!
தானும் அடிபட்டவனைப் போய் பார்த்து மனைவிக்கு ஆறுதலும் சொல்ல விஷ்ணு அவதிப் படுகின்றான்.ஆனால் அன்பு மாமாவும்,கார்த்திக்கும்,அவர்களிடம் நெருங்காமல் பார்த்துக் கொள்ளுகின்றனர்.

காட்சி -3
அடிபட்ட மனோகரனை  பரிசோதித்த வைத்தியர்,அவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்று அவனது மனைவியிடம் சொல்லி
பணத்தை உடனடியாகக் கட்டவேண்டு மென்றும் அவளிடம் சொல்வதை கேட்டு இவர்கள் மூவரும் திகைக்கின்றார்கள்.
அவள் அதற்கு அவனிடம் உள்ள காப்புறுதிப் பணம் உதவாதா, என்று கேட்க அவர் அவன் குடித்து விட்டு வந்து விபத்து அடைந்ததால் காப்புறுதிப் பணம் கிடைக்காது என்றும் பணம் கட்ட  முடியாது என்ற பட்சத்தில் மனோகரனை அரசார் மருத்துவ மனைக்கு இடம் மாற்ற வேண்டும் என்றும் சொல்லி மனைவியைச் சங்கடத்துக்கு ஆளாக்குகின்றார்.மனைவி வழி தெரியாமல் திணறுகின்றாள்.
அன்புமாமா அவளிடம் இரக்கப் பட்டு, அவளோடு பேச முயன்று, அவளை ஆறுதப் படுத்த முனையவே அவள் அவரிடம் நம்பிக்கை கொண்டு தன்னிடம் உள்ள நகையை யாரிடமாவது வித்துத் தருமாறு கேட்கின்றாள்.ஆனால் அதை வாங்க மறுத்த அன்பு தான் தனக்குத் தெரிந்த வைத்தியரிடம் பேசிப்பார்ப் பதாகக் கூறி விஷ்ணுவிடம் வந்து விடயத்தை சொல்கின்றான்!
பின்னர் அதே வேளயில் அவளது மைத்துனன் அவளுக்கு குறைந்த பணத்தை கொண்டுவந்து கொடுத்து அவளையும் திட்டி விட்டு அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டுப் போகின்றான்.
இவற்றையெல்லாம் தூர நின்று பார்த்துக் கொண்டு நின்ற விஷ்ணு அன்பு மாமாவின் உதவிடன் மனைவிக்கு யார் காசு கட்டியது என்பது தெரியாத விதமாக பணத்தைக் கட்டி  விடுகின்றான்!

காட்சி -4

சிகிச்சை ஒருமாதிரியாக நடந்து முடிகின்றது.மனைவி ஆறுதல்  அடைகின்றாள்.ஆனால் யார் பணத்தைக் கட்டியது என்ற குழப்பத்துடன் அன்பு மாமாவைக் கேட்கின்றாள்.அன்புமாமா தனக்கும் யாரென்று தெரியாது என்று சொல்லிச் சமாளிக்கின்றார்.
ஆனால் விஷ்ணுவைக் காபாற்றுமுகமாக அவனை வீட்டுக்கு போகும் படி பணிக்கிறார்.தான் அங்கு இருந்து பார்த்துக் கொள்ளுவதாகவும் கூறி அவனை அனுப்புகின்றார்.விஷ்ணு மறைவாக நின்று மனைவி அன்புமாமாவுடன் பேசுவதுடன் பாகம் நிறைவு பெறுகின்றது!

ஒட்டுமொத்தமாக விஷ்ணுவின்  குற்ற உணர்ச்சியையும் அதனால் அவன் தாக்கப் படுவதையும் மிக விரிவாகக் காட்டிய பாகமாகவே இது இருந்தது!
இதில் விஷ்ணு,அன்புமாமா ,கார்த்திக்கின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்!

மீண்டும் ஆசிகளுடன்!

Thursday, December 25, 2014

EPISODE -453 X-MAS 2014


EPISODE-453 25/DEC /2014 X-MAS DAY
ENGLISH SUMMARY

Good evening All !

It has been a very good episode with Vishnu was feeling very guilty and Raji is opening up with her thoughts about Karthik and her current relasionship!

Vishnu ,Karthik and Anbumaama were at the hospital.
Anbumaama was trying to console the victims wife and tried his best to safe guard Vishnu from  getting in to problems by showing his emotions in front of the lady.
Karthik is also advising him to keep away from th hospital regardless of he is feeling extremly guilty for the accident .
He was very anxious about what wll happen to the man and he was frightened to anticipate the after math ,in case if he dies.
he kept saying to Karthik that if anything happens his conseience will kill him for ever.
Karthik very well understood his emitoional drain and he was by his side with all of this and also took him to the office .

Manimaekali was  trying to contact him while  he was in the hospital
She was stating that she was shocked to see Vishnu in this soirry state.and she also said that she could not sleep thinking about the accident.

But Vishnu was saying tht her worryng has stppoed at the accident  scene and he is having to bear the consequences of the incident.
It seems that he was very worried and not in the mood to weigh her   feelings for him.
The accident seems to be playing an impact on their future relasionship!
We will have to wait and see.

Karthik Rajis meeting in the conference room also appeared like they are still having ,misunderstanding and  ever linkering ego problems.

Raji came to the room where Karthik was and asked why he  looked very unrest .
she  obviously  noticed that he was  anxious  about some thing .
Karthik looked at her and said  he is worried about Vishnu  but did not openly said what happened.
It seems that he did want to tell her about what happened .
But it must have hurt Raji as he was hesitating to open up with her like used to do in the past.,
She sensed his feelings of  distancing him self from her and she said if he does not want to say what happened to Vishnu , does not have to say anything.
That was very pain ful even for us to feel it.
They were once such  a magnificient companions and always shared all the good and bad things ,
Now this is like they were so much fallen  part.! Are they really?

karthik said it was not that he did not want to say anything but saying anything about Vishnu might jeopadise his welbeing.
he also said to her that he will explain every thing to er,some other time .

But Raji was not convinced by his word and she began to say that it is good to see him helping Vishnu and also stated that he has forgiven Vishnu like that .
Her major complain was that Karthik  has changed his attitude with Vishnu ,Susan and every one else but her.
Karthik was shaken by her statement about his dealings in a positive maner to every one else but still not open with  her.
She was right in stating that, but she was opening up and asking him why he has not opened up with her and forgive her ?
Karthik was hesitant in answering that quetion but tried his best to tell her that she has misunderstanding about his behaviour towards her.

She did not give him a chance to explain his piece of mind regardless of he kept trying to say a few words.
That was vey wiered in seeing her doing that .Why?
She also told him that there is a second councelling meeting for both of them and she wanted him to attend .
In case if he does not want to attend or post pone she will still go without him.
That shocked Karthik and he told her that he will attend !
It seems though Raji is pushing him to make a decision as soon as possible!
On the other hand Karrhuk seems hesitant in making the wrong decision aboiut the divorce.He knows that he has feelings for Raji and delaying in admitting to Raji about it.
They both are  seem to be  dragging  to admit their true feelings and going heavily on the EGO trip for sure.
We as their fans ,still waiting for the day they just burst out and say to each other" Enough is Enogh  and we love each other " and that is it no more dragging in their beautiful love story!
Overall a very nice episode with emotinal drain of individuals !!!!

Enjoy the episode for  your selves !
Good night !

.

Wednesday, December 24, 2014

EPISODE-452 ENGLISH


EPISODE-452   SUMMARY 24 DEC/2014

Good evening all!

IT has been an episode with social issues which are  being high lighted through Vishnus accident with the guy who came riding after drinking and bumped on to the car which  Vishnu was driving.

Vishnu apparently hit him while he was talking to Manimaekalai and  not paying attention to the road !

The big question is Who was really at fault? Are they both ?
But Vishnu was  certainly at fault for not stopping and helping the victim who was visibly having a seizure at the scene.

Karthik and Anbumaama are there to console Vishnu who was definitely shaken by the accident and feeling extremely guilty for what happend!

Karthik was telling the facts to Vishnu and the sametime helping him to come to terms with what happened .
All three of them rightly, decided to go and see the victim in the hospital!

There, they found out about the whole situation with the family and helped the wife by paying the fee for the operation.

But the huge question is Vishnu is in the shadow of the  truth and he is having to hide his reaons for his part in paying for the needed operation to safe the victims life.

Overall this has been the episode that seems to tell the viwers about the  social issues which are corrupting the society as a whole !

Is this the time to bring strict rules and regulations to monitor  accidents on the roads?
Is there a way to control the paying system which will ease  the life of the  affected?

Is there a way to stop the death rates when hiaracchy of the hospital decide the fate of  patients  who are struggling to meet their demands?

Is there a way to stop bribing hospital workers in order to get things done for some one's  advantage ?

This episode has left  me with these questions !
All of the actors acted very well !
And the director has done well  in bringing the above issues to light  in the episode which  needed to be adressed ! 
Good night to all

 Have a great Xmas and a happy New year to all my friends !

Tuesday, December 23, 2014





இவள் ஒருத்தி நுழைகின்றாள் ஏன்தான் இங்கு?


                                    இதயங்களில் நிரம்பி நிற்கும் எம் காதலுக்கு
                                     விதம் விதமாய் பிரச்சனைகள் வருவித்து

                                    அகம் முழுதும் வேதனைகள் அனுபவித்து
                                     மனம் வெறுத்து ,முகம் கடுத்து அங்கலாய்த்து

                                   சகவாசம் வேண்டாமென்று தள்ளி நின்று
                                    சுகங்கள் அனைத்தையும் வெறுத்து,மறுத்து

                                   இகமதனில்,தனியே வாழ முடிவு செய்து
                                    பகை வளர்க்காமல் பக்குவமாய் வாழ நினைத்து

                               வெகு விரைவில் விவாகரத்துக்கு வழி கோலும் போது

  இவள் ஒருத்தி நுழைகின்றாள் ஏன்தான் இங்கு?

 EPISODE-451 TAMIL VERSION


EPISODE-451 தமிழ் விமர்சனம் -23/DEC/2014

அத்தியாயம் -451
இன்றைய அத்தியாயம் ஒரு வித்தியாசமான ஓட்டத்தைக் கொண்டதாக இருந்தது .ஆனாலும்  நல்ல ஒரு அத்தியாயமாகவே கருதப் படக்கூடியது!

காட்சி-1
கார்த்திக் விஷ்ணு ராஜியின் சந்திப்பு பற்றியதும் பவித்திரா,மது தமக்குள் பேசிக்கொள்ளுவது பற்றியதுமாகும்.
மலேசியாவில்  உள்ள ஒரு தொழிலகத்தின் மூலம் கிடைத்த வேலையை ஒப்புக் கொண்டு ,அங்கு வருவதற்காக வந்த வாய்ப்பைப் பற்றி பேசுவதற்கு
விஷ்ணு ,கார்த்திக் ராஜியிடம் பேசுவதற்காக மூவரும் கூட்டம் நடக்கும் அறைக்கு வரவேண்டி இருக்கிறது.
முதலில் அங்கே கார்த்திக் முதலிலேயே காத்திருக்க விஷ்ணு அவனுக்கு முனனால் வந்து அமர்ந்து மலேசியா பயணம் பற்றிக் குறிப்பிடுகின்றான்.

விஷ்ணு தனக்கு சொந்த விடயங்களின் காரணமாகதான் வர முடியாது என்றும்  கார்த்திக்கும்,ராஜியும் மட்டுமே விசுவநாதன் சொன்னபடி போக வேண்டி இருக்கும் என்றும் கூறுகின்றான்!
இதைக் கேட்டு கார்த்திக் ,விஷ்ணுவைத திட்டுகின்றான்!
தனக்கும் ,ராஜிக்கும் எப்போதும் வீட்டில் வாக்குவாதமாகவே இருப்பதாலும்,தாமும் மிக விரைவில் பிரிந்து போக இருப்பதாலும் இப்படிச் சேர்ந்து போவதென்பது ஒத்துவரக் கூடிய விடயம் இல்லை  என்றும் கூறி  மனக் கசப்புடன் விஷ்ணுவிடம் முறையிடுகின்றான்.
அதற்கு விஷ்ணுவோ பிடி கொடுக்காமல், வேலை   விடயமும் வீட்டு விடயமும் வேறு ,வேறு அதைப் போட்டுக் குழப்பக் கூடாது என்று புத்தி சொல்கின்றான்! அவர்கள் போயே ஆகவேண்டும் என்றும் வற்புறுத்துகின்றான்.
ராஜி அவர்களுடன் வந்து சேர்ந்ததும் மலேசியப் பயணத்தைப் பற்றி அவளிடம் கூறுகின்றான்!
அவள் அறைக்குள் நுழையும் போதே கார்த்திக்கும் அவளும் ஒருவரை ஒருவர் முதல் நாள்
சண்டை போட்டவர்கள் போலப் பார்த்துக் கொள்ளுவது வேறாகத் தெரிந்தது! 
அதில்  உள்ள சுவாரஸ்மான விடயம் என்ன வென்றால் இருவரும் ,உள்ளம் நிறைய அன்பை வைத்துக் கொண்டு,வெளியிலே சண்டைக்  கோழிகள் போலத் தோற்றமளிப்பது வேடிக்கையாகவும் இருக்கிறது!
அவள் வந்த கையுடன் தான் வரப் போவதில்லை என்பதையும் விஷ்ணு அவளுக்கு சொல்லி வைப்பதுடன் ,இருவரையும் திட்டம் போட்டு ஒன்றாக அனுப்பிவைக்கவில்லை என்பதையும் அவன் குறிப்பிடுகின்றான்!
அவன் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு செல்ல,கார்த்திக் ராஜியிடம் தான் இதை எதிர் பார்க்கவில்லை என்று சொல்கின்றான்!
அத்துடன் ராஜிக்கு தன்னுடன் வர விருப்பமில்லாமல் இருந்தால் விசுவநாதனிடம் சொல்லிவிட்டு
அவள் நிற்கலாம் என்கின்றான்.
ஆனால் அதற்கு அவள் தனக்கு அதில் ஒரு  பிரச்சனை இல்லைஎன்றும் அவனுக்கு விருப்பம் இல்லாவிட்டால் அவன் விசுவநாதனிடம் சொல்லிவிட்டு நிற்கலாம் என்கின்றாள்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஆணவத்தின் உச்சியில்  நின்று கொண்டு
தம்மைத் தாமே ஏமாற்றும் காட்சியாகத்தான்  அது அமைந்தது.
கடைசியில் கார்த்திக் அங்கே இருவரும் போவதால் வரும் சில விளைவுகளை சுட்டிக் காட்ட முனைந்த போது,அவள் அங்கு சென்று நடக்கும் விதமாக நடந்து கொண்டால் எதையும் சமாளிக்கலாம்  என்ற கருத்துப் பட மறுமொழி கூறி அவனை மடக்குகின்றாள்!
அவனும் அதைக் கேட்டு மனதுக்குள் குமைகின்றான் அவளும் பதிலுக்கு அவனது புத்திமதிகளுக்கு
செவி சாய்க்கத் தான் தயாரில்லை என்பது போல மனதுக்குள் முறுகுகின்றாள் !
இருவரையும் பார்க்க நமக்கு வேடிக்கையாகத் தான் இருந்தது!

காட்சி-2
பவித்ராவும் மதுவும் கார்த்திக் ராஜியைச் சேர்த்துவைக்க தமது திட்டத்தை நகைச் சுவையாக செயலாற்ற,அதைப் பற்றி பேசும் காட்சி!
இருவரையும் உரிமை என்ற பேரில் சேர்த்த்வைப்பதா இல்லை ஒருவரில்  ஒருவருக்கு இரக்கம் வரச் செய்து ,ஒருவர் ஒருவரைக் கவனிக்கப் பண்ணுவதா என்பதில் அவர்கள் மும்மரமாகத் திட்டம் தீட்டுகின்றார்கள்

காட்சி-3
 ஏதோ கப்பல் கவிழ்ந்தது  போல யோசனையுடன் நின்று கொண்டு  இருந்த விஷ்ணு வைத்தேடி
கார்த்திக்கும் அன்பு மாமாவும் வருகின்றார்கள்.
பலமுறை முயன்றும் அவனிடம் காலையில் இருந்து பதிலொன்று மில்லாததால் கவலையடைந்த இருவரும் அவனை கண்டுபிடித்து அலுவலகத்திலேயே அதை பற்றி விசாரிக்கிறார்கள்!
அவனும் ,பயந்து கொண்டே நடந்த விடயத்தை எடுத்து உரைக்கின்றான்!
தான் ஒரு பெரிய பிழை விட்டு விட்டதாகவும் கூறுகின்றான்.அன்புமாமா நகைச்சுவையாக அவனைச் சீண்டுகின்றார்.
முன்னர் நாம் பார்த்த மாதிரியே அவனது வண்டி ஒரு துவிச்சக்கரம் ஓட்டிவந்தவனோடு மோதிய
சம்பவத்தை விமர்சிக்கின்றான்.

காட்சி-4

விஷ்ணு ,மணிமேகலையை கூட்டிக் கொண்டு வெளியே போவதும் ,உல்லாசமாக அவர்கள்
பேசிக் கொண்டு போனதும் ,விபரீதமாக,விபத்துனடந்ததும் சொல்லப் படுகிறது.
கடைசியில் சம்பவம் நடந்த இரதத்தில் அடிபட்டவன் உயிருக்குத் துடித்துக் கொண்டு இருக்க
விஷ்ணு ,தனது வண்டியை நிறுத்தாமல் போவதுடன் காட்சி  முடிகிறது!

ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல அத்தியாயம் !
நடித்தவர்கள் எல்லோரும் உணர்வு  பூர்வமாகவும் நகைச் சுவையாகவும் சிறப்பாக  நடித்த பாகம் !
பாராட்டுக்கள்!
மீண்டும் ஆசிகளுடன்!


 
 .

EPISODE -451 SUMMARY- ENGLISH



EPISODE-451 SUMMARY
TUESDAY/23/2014
Good evening all my friends!
This has been a nice  episode with Visnu's car accident and Karthik ,Raji scene in the conference room too.
Karthik and Raji are meeting in the conference room for a meeting and they were told about the approved project from Malaysia!
Visuvanathan sir wants all three of them to  go to Malaysia .
Vishnu has decided  not to go there.and telling Karthik and Raji that Visuvanathan sir is aware of Vishnus decision not to go as he is having personel things to take care .

Karthik was very hesitant in hearing that he has to go with Raji to Malaysia.
Vishnu tells him off about being hesitant in going with his wife.
karthik tells Vishnu he is not happy to go with Raji as they still not very happy at home and also having arguments at home  about small issues too .
Vishnu  explains the reasons behind him not going to Malasiya!
Raji came and joined them in the conference room.
Vishnu explains about the project to Raji too !
He joked about the Malaysian project and also teasing them that he did not intentioally withdrawing the offer in order to let Karhtik and Raji go to gether to Malaysia on their own !
They both looking at each other and grinning !Super scene !
After Vishnu left ,Karhtik is saying he never expected this to happen and if she does not like to come with him to Malaysia,He can talk to Visuvanathan about it.
But to his surprise ,she says itis ok with her and he continued by saying that if there are any parties after the sessions it will be awkward for both of them not to socialize as expected from them both.
Raji says as far as every thing is under control it will not be difficult!
Karthik's mind voice speaks there .very funny to see his face  and hear him cursing her in a very teasing way! Another super sequence .

They both acted so well !No words and it is a pleasure to see them both like that .
The expression could be explained as they both are still in so much love but so arrogant in their own ways to open up and admit their true feelings!

Mathu and Pavithra are Mathu are planning their own plan to reunite Karthik and Raji and they were discussing their plan in a funny manner.

The last scene was about Vishnu and the accident as he was explaining to Karthik and Anpu mama about what happebned when he took Mani maekalai out in the car .
He is in danger as he left the scene and feeling guilty about it and saying he has a problem.
The promo scene was shown to viwers as it happened and in the end Vishnu left the victim struggling to survive and he fled .Now feeling guilty and anguish about the aftermath .

The episode ended with the scene at the accident.

Enjoy the episode your selves friends!
Good night!






Monday, December 22, 2014

EPISODE-450 TAMIL VERSION

EPISODE-450
அத்தியாயம்- 450 MONDAY 22/DEC/2014

இன்றைய அத்தியாயம் மிகவும் அழகான, அமைதியான பாகமாக
அமைந்தது!

காட்சி-1
விஷ்ணு ,மணிமேகலை விடயத்தில் ஒரு குழப்பத்தில் இருக்கிறான்!
மணிமேகலை தன்னை மனப் பூர்வமாகக் காதலிப்பது தெரிந்தாலும்
தனது மனம் இன்னும் லக்ஷ்மியை மறக்க  முடியாமல் இருப்பதை
எண்ணி குழப்பம் அடைகின்றான்.
கார்த்திக் அவனது குழப்ப நிலையைக் கண்டு அவனை  ஆறுதல் படுத்தி
அவனுக்கு ,மணிமேகலை மீது உள்ள அன்பை பற்றி விசாரிக்கின்றான்.
விஷ்ணுவும் குழப்பத்துடன் அவளைத் தனக்குபிடித்துக்கொண்டிருப்பதாகவே சொல்கின்றான்
அதைக் கேட்டு கார்த்திக் ,அவனிடம்,போய் மணிமேகலையிடம் இவனது மனதைத்  திறந்து பேசச் சொல்லுகின்றான்.

காட்சி-2
விஷ்ணு மணிமேகலையை வரச் செய்து மிகவும் நகைச் சுவை கலந்த வசனங்களுடன் அவளைப் பேசவைக்கின்றான்!.
மணிமேகலைக்கு விஷ்ணுவின் உள்ளத்தைப்  புரிந்து கொண்டவள் போல
அவளும் ,பிடி கொடுக்காமல் தனது மனக் கிடக்கையை  வெளிப்படுத்து கின்றாள்
அதன் பின்னரே விஷ்ணு மணிமேகலையிடம் சென்று அவளோடு வெளியே போக முடிவெடுத்து அதையும் அவளிடம் சொல்லுகின்றான்.
கார்த்திக்.விஷ்ணு .மணிமேகலை மூவரும் இந்தக் காட்சியில் மிகவும் உணர்வு பூர்வமாக நடித்திருக்கின்றார்கள்  !

காட்சி -3
பவித்ராவும்  மாதவியும் சாப்பாட்டு அறையில் சந்தித்துப் பேசும் காட்சி இது.
கார்த்திக்கை,அலுவலகம் முழுதும் ,தேடி காணாமல் அங்கே அரும் மாதவியை பவித்திரா ,வரவேற்று தன்   முன்னே உட்கார வைக்கின்றாள்!
யாரைத் தேடுகின்றாய் என்று கேட்டதற்கு மாதவியும் கார்த்திகைத் தேடுவதாகக் கவலையுடன் பதில் சொல்லுகின்றாள்.
அதைக் கேட்டு ,அவளது உள்நோக்கத்தை நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் பவித்திரா கார்த்திக் ஏதாவது கூட்டத்திலோ ,ராஜியோடோ இருப்பார் என்று கூறி அவளைக் கேலி செய்கின்றாள்.
அதனால் ஆத்திரமும் அங்கலாய்ப்பும் கொள்ளும் மாதவி ,கார்த்திக் ,ராஜிக்கு இடையே பிரிவினை ,கமல் மூலமாகக் கூடிக்கொண்டு இருப்பதாக பவித்திராவுக்கு ,எரிச்சல் மூட்டும் விதமாக தகவல் கூறுகின்றாள் .
அதை மறுத்து பவித்திரா கார்த்திக் ராஜி இப்போது இன்னும் நெருங்கிக் கொண்டுவருவதாகவும் அவர்களது காதல் இன்னும் உயிரோடு இருப்பதாகவும் பொருள் பட மாதவிக்கு  விளக்கம் கொடுக்கின்றாள்!
அதைத்தொடர்ந்து கார்த்திக் அறைக்குள் நுழைவதையும் பவித்திரா,மாதவிக்கு சொல்லிவைப்பதோடு..அவனைத் தொடர்ந்து ராஜியும் அங்கு வருவாள் என்று சொல்கின்றாள்!
அவள் சொன்னது போலவே ராஜியும் அங்கு வந்து சேருகின்றாள்!

காட்சி-4
கார்த்திக்கும்,ராஜியும் அறைக்குள் வந்ததைக் கண்டும்,பவித்திரா அவர்களைப் பற்றி சொன்ன கதைகளையும் கேட்டு மாதவியின் முகம் ஏமாற்றத்தில் வாடுகின்றது.
அதை விட பவித்திரா அவளுக்கு மேன் மேலும் புத்தி புகட்டுவது போல ,அவர்கள் இருவரும் ,ஒருவரை ஒருவர் பார்ப்பதையும்,கண்கள் பேசுவதையும்,கார்த்திக்,ராஜிக்கு சக்கரை கொடுப்பதையும் ராஜி சந்தோஷமாக ,அதை ஏற்றுக் கொண்டு முறுவலிப்பதையும்,கார்த்திக் அவளைப் பார்த்து ,மகிழ்வுடன் புன்னகை செய்வதையும்   அப்படியே ஒரு  தத்ரூபமான நேர்முக வர்ணனையாகவே கொடுத்து மாதவியை அப்படியே திகைப்பில் ஆழ்த்தி வேதனையும் படச் செய்கின்றாள்! 
கார்த்திக்கும்,ராஜியும் இந்தக் காட்சியில் ஒரு சொல்லுத்தானும் பேசவேயில்லை.,முகபாவனைகளும், செய்கைகளுமே அவர்களின் அமைதியான போக்கையும்,இருவருக்கும் அடிமனதில் இருக்கின்ற உணர்வுகளின் வெளிப்பாட்டையும் மாதவிக்கு சந்தேகமில்லாமல் எடுத்துக் காட்டுவதாக   இருந்தன..
பவித்திரா அவர்களைப் பற்றி மாதவிக்கு வருணிப்பதோடு, மாதவியின் முக மாற்றங்களையும் பார்த்து ,திருப்தி கொண்டது போலிருந்தது!
கடைசியில் மாதவியைஎச்சரித்து இனிமேல் ,அவர்களது வாழ்க்கையில் தலையைப் போடுவதை விட்டு,விட்டு இவளை தன் வேலையில் கவனமாக ,இருந்து முன்னேறுகின்ற வழியைப் பார்க்கும்படிக் கூறிச் செல்லுகின்றாள்

கார்த்திக்கும் ராஜியும் கண்களால் பேசிக்கொண்டே மேசையில் இருந்து காப்பி குடித்துக் கொண்டு இருக்க ,எரிச்சலும்,அவர்களைப் பார்த்து புகைக் சலும் கொண்ட மாதவி அவர்கள் இருவரையும் மாறி ,மாறிப் பார்த்தபடி இருப்பதுடன் காட்சி முடிகின்றது!
கார்த்திக் ராஜி வழமை போல அருமையான நடிப்பு!
மாதவியாக நடித்த அனுவும்,பவித்திராவும் மிக நன்றாகவே நடித்திருந்தனர்!
ஒட்டு மொத்தமாக ஆறுதலான உணர்வு பூர்வமான அத்தியாயம்!

மீண்டும் ஆசிகளுடன்!