Wednesday, February 04, 2015



EPISODE-477 TAMIL

EPISODE-477 TAMIL
அத்தியாயம்-477
TUESDY-FEB/3/2015
இன்றைய அத்தியாயம் மிகவும் ருசிகரமான  பாகம்  என்றுதான் சொல்லவேண்டும்.

காட்சி-1
ராஜி கமல் சாப்பாட்டுக் கடையில்  சந்திப்பு.
மிகவும்,எளிதாகத் தொடங்கி ராஜிக்கு சிக்கலாக முடிந்த காட்சி.
கமல் தனது மனதைத் திறந்து பக்குவமாக ராஜிக்குத் தன காதலைத் தெரிவிக்கிறான்.
ராஜி திகைப்புடன் அவனை வையும் காட்சி.
வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.இருவரதும் நடிப்பும்  சிறப்பாக அமைந்தது. 

காட்சி-2
விஷ்ணுவும் மணிமேகலையும் ராதிகாவைச் சந்தித்து உண்மை அறியும் காட்சி.
விஷ்ணு மிகவும் மனம் உடையும் காட்சி.ராதிகாவோ தன் கணவனுக்கும்.விஷ்ணுவுக்கும் உள்ள தொடர்பை அறியாது அவனிடமே தனது கவலையையும் ஆதங்கத்தையும்.ஆத்திரத்தையும் கொட்டிக் கவலைப் படும் காட்சி.
விஷ்ணுவும் மணிமேகலையும் வகையாக மாட்டிக் கொண்ட உணர்வுடன்
ஒருவரை ஒருவர் பார்த்து முழித்துக் கொண்டிருக்கும் காட்சி.
காட்சி-3
கார்த்திக்குக்கு புதிய சோதனை  வந்து அவனை அல்லல்படுத்தும் கட்டம்.
யாரோ அவனுக்காக மணமகள் தேடும் வேலையில் மும்மரமாக விளம்பரம்
செய்ததால் அவனுக்கு அது சம்பந்தமாக ,பல பெண்களிடம் இருந்து அவனை மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ள அலையும் பல பெண்களின் தொலை பேசித் தொல்லை நீடிக்கிறது.
யார் இதைச் செய்தது   என்று தெரியாது  அவன் குமைகின்றான் ,ஆத்திரப் படுகின்றான்.

காட்சி-4

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல ராஜி கார்த்திக்கின் அறைக்கு வந்து அதைப் பற்றி விசாரித்து அவனை தாறுமாறாக வைக்கின்றாள்.
அவன் இதற்கும் தனக்கும் ஒன்றுமில்லை என்று மறுக்கிறான்.
ஆனால் அவளோ  கார்த்திக் தன்னை ஏமாற்றி பொய் சொன்னதாகக் குற்றம் சாட்டுகின்றாள்
கார்த்திக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்து அவளை நீதான் சிலவேளை என்னைப் பழி வாங்கும் நோக்குடன் செய்தாயோ என்று திட்டுகின்றான்.
அதற்கு அவள் .அவனை ஏசுகின்றாள் ".நான் அப்படி வேலை செய்வேன் என்று நம்புகின்றாயா" என்கின்றாள்.
அதற்கு  அவன்" நீ நான் இப்படி விளம்பரம் கொடுப்பேன் என்று நம்புகின்றாயா" என்று கேட்கின்றான்.
இருவருமே ஒருவரை ஒருவர் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தும்
ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்.காயத்தைப் படுத்தி பின்னர் சமாதானம் சொல்வது வேடிக்கையாகவே இருக்கிறது.
இந்த இருவரதும் காதலை நமது இயக்குனர் மிகவும் ருசிகரமான முறையில் இழுத்து.பறித்து.அடித்து நொருக்கி பின்னர் உணரப் படுத்தி. ஒருவருக்கு ஒருவர்  விட்டுக் கொடுக்காமல் பேச வைத்து.பின்னர் பிரித்து.இப்போது சண்டையும் பிடிக்க வைத்திருக்கின்றார் .ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பது மாத்திரம் நிச்சயம் என்பதைக்  காட்டாமல்  காடுகின்றார்.

அத்துடன்  இருவரையும் மற்ற எவரும் அணுகாமலும் பார்க்கும் முறையில் கதையோட்டம் இப்போது புதுப் பொலிவு எடுத்து இருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்.
கார்த்திக் .ராஜியின் அற்புதமான நடிப்பு மேலும் மேலும் புடம் போடப் பட்டுக் கொண்டே வருகின்றது.
இருவரும் விரைவில் சேர்வது நிச்சயம் ஆனால் எப்போது என்பதுதான்
தெரியாத விடயமாக  இருக்கிறது.

காத்திருந்து பார்ப்போம்
மீண்டும் ஆசிகளுடன்!

 

No comments:

Post a Comment