UNNAI ARINTHAAL-CHAPTER-2
உன்னை அறிந்தால்.............பாகம் -2
பனியில் சறுக்கி
விழுந்த நிலாவின் ஆச்சரியத்துக்கு காரணம் வேறொன்றுமில்லை.இத்தனை நாளாக ,அவள் அந்த வங்கியில் வேலை பார்க்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே இன்னொரு பிரிவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் நந்தகோபால் தான்.இவளைக்
கண்டாலே ஒருவிதமாக
நோட்டம் விட்டுவிட்டு முகத்தை எப்போதுமே திருப்பிக் கொண்டு போகும் நந்தகோபால் தன்னைக் காப்பாற்ற வந்தானா என்பது
அவளுக்கு நம்பவே முடியாமல் இருந்தது.
தனது சமநிலையைச் சுதாரித்துக் கொண்டு அவள் எழுந்து
நின்றபோது "என்னங்க பார்த்துக் காலை வைக்கிறது இல்லைங்களா?"என்று அவனது கட்டைக் குரலில்
கேட்டு வைத்தான்.அவனது சுத்த மான ,இந்தியத் தமிழனின் குரல் அவளுக்கு புதிதாக இருந்தது.எப்போதுமே ஆங்கிலத்தில் அவன் நண்பர்களோடு
அரட்டை அடிப்பதை வேலையில் அதுவும் சாப்பாட்டு அறையில் கண்டிருக்கிறாள்.கேட்டு இருக்கிறாள்.
இதுவே முதல் முறையாக அவன் தமிழ் பேசிக் கேட்டாள்.அதுவும் இந்தியத்தமிழ்.
அவனுக்கு ஆங்கிலத்திலேயே "தேங்க்ஸ்(Thanks) என்று கூறிவிட்டு ஆடையில் ஒட்டிக் கொண்டு
இருந்த பனிப்பஞ்சுகளை தட்டினாள்.நந்தகோபால் அவளின் செய்கைகளை
அவதானித்துக் கொண்டு
ஏதோ சொல்லுவதற்கு ஆயத்தமானான்.
"ஆர் யு
ஓகே நொவ் "(Are you ok now?)என்பதுதான் கேள்வி".ம்ம்ம் ரொம்ப நன்றி " என்று இப்போது தமிழில் பதிலளித்தாள்.அவனும் அதைக்கேட்டு புன்னகைத்து விட்டு "நீங்களும் தமிழ் பேசுவீங்களா" என்று கேட்டான்.அவனது கேள்வியில் ஏதாவது கேலி இருக்குமோ என்று நினைத்தவளாக தனது அழகான விழிகளை உருட்டி அவனை ஒருமுறை ஆச்சரியத்துடன் பார்த்தாள் நிலா.
இவளின் தயக்கத்தை உணர்ந்தவன் போல அவன் தயங்கிக் கொண்டே "இல்லைங்க சும்மா கேட்டேன் அதுதான்" என்று மழுப்பினான்.அவனது உண்மையான நோக்கம் அவளுக்கும் புரியவில்லை.ஆனாலும் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் தன்னை பிழையாகப் புரிந்து கோலாப் போகிறானே என்ற ஏதோ ஒரு ஆதங்கத்தில் " நல்லாப் பேசுவேன் " என்றாள்.அவளது பதிலிலும் அவளது குரலிலும் ஏதோ புதுமை கண்டவன் போல சிரித்தவன்,பின்னர் ஒருமாதிரி அவளிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு தனது கார் தரித்த இடத்துக்கு அவள் முன்னாள் நடந்தான்.அவள் அவனுக்கு பின்னால் இரண்டு அடிதூரம் இடைவெளி இருக்க நடந்து சென்றாள்.
முன்னாள் கம்பீரமாக தனது உயரமான உடற்கட்டோடு ,ஒருவிதமான பயமும் இல்லாமல் விழுந்திருந்த பனியில் நடந்து செல்லும் அவனைப் பார்க்க நிலாவுக்கு உண்மையிலேயே பொறாமையாக இருந்தது.
அவள்
அவனுக்குப் பக்கத்திலே நடக்காமல் போனதுக்கு காரணமும் இருந்தது.இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்வதால் கார் தரிப்பிடம் ஒரே இடத்தில்தான் இருந்தது.அவனோடு சேர்ந்தே சென்று இருந்தால் அங்கு போய்ச் சேரும் வரையாவது இவள் மறுபடியும் இந்தப் பனியில் சறுக்கியிருந்தாலும் இன்னொரு முறை அவன் உதவி கிடைத்திருக்கும்.
ஆனாலும் இவளுக்கு அவனின் உதவி தேவைப் படுவது சரியாகப் படவில்லை.அதை விட அவனை பலநாட்களாக இவள் கவனித்து வருவதும் ஒரு காரணமாகும்.எப்போது மதிய உணவுக்குப் போகும் போதும் அவன் தன்னை நோட்டம் விடுவதையும், தான் பார்த்ததும் முகத்தை திருப்புவதையும் அவள் அவதானித்து வந்திருக்கிறாள்.தனக்குள்ளே இவனைப் பற்றி அறிய வேண்டும் என்றும் ஒரு ஆவல் எத்தனையோ முறை எழுந்தும் தனக்கே உரிய அடக்கத்துடன் அந்த எண்ணத்தைப் பின் போட்டு வந்தாள்.
இன்று அவனது ஸ்பரிசம்,அவனது உதவும் தன்மை,அவனது கனிவான பேச்சு,எல்லாமே மரியாதைக்கு உரியனவாக இருந்தாலும்
அவனது மனத்தைக் கவரும் அழகான
தோற்றம் .அவனது கண்களில் இருந்த ஏதோ ஒரு மாய சக்தி ,அவளை அவன் பார்த்த பார்வைகள் போன்றவை
அவனை நெருங்குவது சரியா என்ற கேள்வியைத்தான் அவளுக்கு எழுப்பின.
அவன்
பார்வையில் மறைந்ததும் தனது காரைத்தேடி போனவளுக்கு இன்னொரு ஆச்சரியம்
காத்திருந்தது.
தொடரும்..........!
